
காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த துணை ராணுவப்படை வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோர் உள்பட 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. வருத்தம் அளிக்கிறது. இச்செய்தி நாடு முழுவதும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை த.மா.கா வன்மையாக கண்டிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை உடனடியாக கண்டுபிடித்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டும்.
ஜி கே வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
#gkvasan #tamilmaanilacongress #tmcfortn #tnpolitics
#JammuKashmir #CRPF #pulwama